காலையில் அழுகிறார் மாலை கொஞ்சுகிறார்: சுஷ்மா சுவராஜ் பேச்சு

ஹுப்பள்ளி: கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சுஷ்மா கூறியதாவது: பெரும்பான்மை பலமுள்ள அரசால் மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.  இல்லாவிட்டால், 37 இடங்களை பெற்ற முதல்வர் குமாரசாமியின் கூட்டணி அரசை போல்  பதவியை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு படவேண்டும். எனவே, மத்தியில் மீண்டும் ஒருமுறை  பாஜ.வுக்கு பெரும்பான்மை பலம் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடியால் முதல்வர் குமாரசாமி தினமும் காலையில்  எழுந்தவுடன் கதறி அழ தொடங்குகிறார்.

பிறகு, நாற்காலியை நழுவ  விட்டு விடக் கூடாது என்பதற்காக மாலையில் அதே கட்சியின் தலைவர்களுடன் கொஞ்சி  குலாவுகிறார். மோடியின் கையில் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருக்கும். நாடு பத்திரமாக  இருந்தால் மட்டுமே அனைவரும் நலமுடன் வாழ்வது சாத்தியம். எனவே, ஒரு கணம் நினைத்துப் பார்த்து  வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: