ஹுப்பள்ளி: கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சுஷ்மா கூறியதாவது: பெரும்பான்மை பலமுள்ள அரசால் மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லாவிட்டால், 37 இடங்களை பெற்ற முதல்வர் குமாரசாமியின் கூட்டணி அரசை போல் பதவியை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு படவேண்டும். எனவே, மத்தியில் மீண்டும் ஒருமுறை பாஜ.வுக்கு பெரும்பான்மை பலம் அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடியால் முதல்வர் குமாரசாமி தினமும் காலையில் எழுந்தவுடன் கதறி அழ தொடங்குகிறார்.