ஐதராபாத்: வார்னர், பேர்ஸ்டோ அதிரடி, ரஷித்கான் சிறப்பான பந்து வீச்சு என எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டதால் இலக்கை எளிதில் எட்டி வெற்றிப் பெற்றோம்’ என்று ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.சன் ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது. டோனி இல்லாமல் களமிறங்கிய சென்னை அணிக்கு ஷேன் வாட்சன்- டு பிளெஸ்ஸி ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஆனால் அடுத்து வந்தவர்கள் ஐதரபாத் பந்துவீ–்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். அதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐதராபாத் டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையணாடினர். வார்னர் 50 ரன்னில் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார். ஐதராபாத் 16.5 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.