மாங்கனி மாநகர போலீசாருக்கு சமீபத்தில் ரவுடிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து இன்னும் அதிகாரிகள் மீளவில்லையாம். கிச்சிப்பாளையத்தில் உள்ள ரவுடிகள் கொட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டோம் என மார்தட்டிக்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் அந்த ரவுடிக்கும்பல் திறந்தவெளியில் மது பார்ட்டியுடன் பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி ஹேப்பி பர்த்டே கொண்டாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் மாவட்டத்திலேயே ரவுடிகள் போட்ட ஆட்டம், சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியது. இதனால், தனிப்படை அமைத்த உயர் அதிகாரி, பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.