ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் டி20 போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 5.5 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ராயுடு - கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. ராயுடு 57 ரன் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அடுத்த பந்து நோ பால் ஆக 1 ரன் கிடைத்தது. பிரீ ஹிட்டில் டோனி 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் டோனி (58 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 3 பந்தில் 8 ரன் தேவை என்ற நிலையில், சான்ட்னருகு ஸ்டோக்ஸ் வீசிய பந்து இடுப்புக்கு மேலே புல்டாசாக சென்றதாக கணித்த நடுவர் நோ பால் என அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் அதை நோ பால் இல்லை என மறுத்தார்.