சென்னை : சென்னை செங்குன்றம் அருகே பம்மது குளத்தில் காவலரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவர்களை காவலர் சாக்ரடீஸ் பிடித்து விசாரித்த போது அரிவாளால் தாக்கப்பட்டார். காயம் அடைந்த சாக்ரடீஸ் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரை தாக்கிய மதன்குமார், ஸ்ரீதர் ஆகியோரை செங்குன்றம் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.