ஆலங்குடி: ஆலங்குடி அருகே எச்.ராஜா பிரசாரம் செய்துவிட்டு சென்றதற்கு பின் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வருவதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கூடினர். ஆனால், நீண்ட நேரத்திற்கு பிறகு இரவு 9.30 மணிக்கு எச்.ராஜா அப்பகுதிக்கு வந்து வாக்கு சேகரித்துவிட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த ரவி (35) (அதிமுக கிளை செயலாளர்) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்குமிடையே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.