புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் நேற்று பகல் நேர வெப்ப நிலை சராசரி அளவைவிட 3 டிகிரி அதிகரித்து 38.7 டிகிரி செல்சியசாக பதிவானது. கோடை வெயில் அதன் தாக்கத்தை காட்ட தொடங்கிவிட்டது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியசாக பதிவானது. காற்றில் ஈரப்பதம் 84 மற்றும் 27சதவீதத்துக்கு இடையே ஏறி இறங்கியது. இன்று வான மேகமூட்டததுடன் காணப்படும். சில இடங்களில் புழுதிபுயல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.