புதுடெல்லி: உலகளவில் மாசு பாதிப்பு மோசமான நகரங்கள் வரிசையில் முதல் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.கிளைமேட் டிரென்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தால், ‘2014 - 2019ம் ஆண்டுகளில் இந்திய காற்று தரம் குறித்து அரசியல் தலைவர்களின் பதவி மற்றும் செயல் திறன்’, எனும் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட மோசமான மாசு நகரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டு, நிலைமைக்கு காரணமானவர்களை கடுமையாக தொண்டு நிறுவனம் சாடியுள்ளது.தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள்:உலகின் மோசமான மாசு நகரங்கள் பட்டியலின் முதல் 15 இடங்களில் இந்தியாவின்14 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி 3ம் இடம் பிடித்துள்ளது. தொகுதியை மிளிர வைப்பேன் எனக் கூறி, வாரணாசியில் பிரதமர் மோடி பழைய கட்டடங்கள் இடித்தும், புதிய கட்டடங்களை கட்டும் பணியை அசுர கதியிலும் மேற்கொண்டு வருவதால், அங்கு எங்கு பார்த்தாலும் புழுதிப்படலமாக உள்ளது. காசியில் சுவாசக்கோளாறு, ஆஸ்த்மா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை டாக்டர்களும் உறுதி செய்துள்ளனர்.