மான்ட்டெரி: மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்காவுடன் (பெலாரஸ்) மோதிய முகுருசா, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அவர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது, அசரென்கா காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அபியர்டோ ஓபனில் முகுருசா தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்று அசத்தினார்.நடப்பு சீசனில் அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.