திருவனந்தபுரம் : சபரிமலை என்பது ஒரு இடத்தின் பெயர் தான் ,தேர்தல் சட்டத்தை நான் மீறவில்லை என்று நடிகர் சுரேஷ்கோபி விளக்கம் அளித்துள்ளார். திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகரும், மக்களவை எம்பியுமான சுரேஷ்கோபி திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, ‘‘இந்த தேர்தலில் சபரிமலை ஐயப்பன் அலை வீசும்’’ என்று அந்த விவகாரம் பற்றி பேசினார். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தை பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையில், அதைப்பற்றி பேசியதால் சுரேஷ்கோபிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.