மான்ட்டெரி: மெக்சிகோவில் நடைபெற்று வரும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) தகுதி பெற்றார்.அரை இறுதியில் ஸ்லோவகியாவின் மெக்தலினா ரிபாரிகோவாவுடன் மோதிய முகுருசா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருடன் (ஜெர்மனி) மோதிய விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 11 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பைனலில் முகுருசா - அசரென்கா மோதுகின்றனர்.