புதுடெல்லி: ‘பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களின் நிறுவனங்களை பிரதமர் மோடி வளர்ச்சி அடைய செய்கிறார்‘ என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 130 கோடி இந்திய மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமான இந்த 2 நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.