ரவை இல்லாமல் உப்புமா சாப்பிடுவதில் மோடி கில்லாடி: திண்டுக்கல் லியோனி கிண்டல்

அரக்கோணம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆர்கே பேட்டையில் அவர் பேசியதாவது: தினமும் 2 லட்சம் மக்களை சந்திக்கின்ற ஒரே தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். 13ம் ஆழ்வார் என்று அழைக்கப்பட்டவர், இத்தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன். தைரியம் இருந்தால் இந்து மதத்தைபற்றி ஜெகத்ரட்சகனிடம் பேச எச்.ராஜா யாரா. அன்புமணி ராமதாஸ் அதிமுகவை பலமுறை அசிங்கப்படுத்தியுள்ளார்.

 

குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் மக்கு, களிமண், டயர் நக்கி என்றெல்லாம் கூறிவிட்டு, பிறகு அவர்களிடமே கூட்டணி வைத்துள்ளார். ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டக் கூடாது என ராமதாஸ் தெரிவித்தார். பின்னர் அவர்களிடமே கூட்டணி வைத்துள்ளனர். ரவை இல்லாமல் உப்புமா சாப்பிடுவதில் பிரதமர் நரேந்திர மோடி கில்லாடி. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். திமுக ேவட்பாளர் ஜெகத்ரட்சகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: