டெல்லி: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தபின்னர், ஓட்டலுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம். மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.