ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2021-ம் ஆண்டு காலாவதியாகும் ஷாம்பு , பவுடர் பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டன. நடந்து முடிந்த சோதனையின் முடிவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஃபார்மால்டிஹைட் 38 முதல் 45% நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயரில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் மாசுப்பொருளாகக் கலந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்துகொள்ள நடைமுறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்தி இதுதான் என கூறுகின்றனர். மேலும் இது கட்டுமான பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்புவினை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிக அளவில் நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என ஆய்வில் கண்டிறியப்பட்டுள்ளது.