டெல்லி: விண்வெளி சாதனை நிகழ்த்திய டிஆர்டிஓவிற்கு காங்கிரஸ் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு உலக நாடக மேடை தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து, ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேட்டிளித்தபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பெறுவார்கள். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். இந்த திட்டத்தின் மூலம் 25 கோடி பேர் நேரடியாக பயன்பெறுவார்கள். வறுமைக்கு எதிரான இறுதி தாக்குதல் தொடங்கியுள்ளது. நாட்டை விட்டு வறுமையை நாங்கள் ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையாக தெரிவித்தார்.
பாதுகாப்பு துறை தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த சமயத்தில் பிரதமரின் பாதுகாப்பு துறை குறித்த அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சில கட்சிகள் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அறிவிப்புக்களை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய வட்டராரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி