புதுடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.