சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்த தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டால் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சுமார் 30 கோடி ரூபாய் ரொக்கமாக இதுவரை பறிமுதல் செயய்யப்பட்டதாகவும், ரூ.4.45 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் பறிமுதலானதில் 94 கிலோ தங்கம் திருப்பி தரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: