புதுடெல்லி: சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் 68 பேரை கொன்றது யார் என்பது `யாருக்கும் தெரியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கிண்டலடித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2007 டிசம்பரில் அரியானா மாநிலம் பானிபட் அருகே சென்று கொண்டிருந்தபோது, 2 பெட்டிகளில் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேசிய புலானய்வு அமைப்பு நபா குமார் சர்கார் என்ற சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. ஆனால் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் தேசிய புலனாய்வு குழுவினர் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்தது.