ஒட்டாவா: கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், முதல் வெள்ளையர் அல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி தெற்கு நகர தொகுதியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் 38.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. தலையில் டர்பன் அணிந்து நெஞ்சில் கைவைத்து நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைந்தபோது பலத்த கைத்தட்டல்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய அவர், நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தனது வருத்தத்தை பதிவு செய்தார்.