இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை 26ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். அல்அஜியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள இவர், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நவாஸ் உடல்நலமின்றி இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஜாமீன் வழங்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நவாஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து கடந்த பிப்ரவரி 25ல் உத்தரவிட்டது.