இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்சி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதைத் தொடர்ந்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு அணி வீரர் ராகுல் ஷங்கர் பெகே பந்தை அபாரமாக ‘ஹெட்’ செய்து கோல் போட்டார் (116வது நிமிடம்). பெகே ஆட்ட நாயகன் விருதும், கோவா அணி வீரர் பெரான் கோரோமினஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.