ஐதராபாத்: சர்வதேச அளவில் இந்தியா முன்னேற வேண்டும் என்றால், பாஜ, காங்கிரஸ் அல்லாத, புதிய கூட்டாட்சி ஏற்பட வேண்டும்’’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது தேர்தல் பிரசாத்தை கரீம்நகரில் நேற்று முன்தினம் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:நம் நாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்றால், பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் இருக்கக்கூடாது. அப்போது நம் நாட்டில் மாற்று கூட்டாட்சி அரசியல் வரும். மாநில கட்சிகள் இந்த நாட்டை ஆள வேண்டும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தவறிவிட்டன. சுமார் 100 முதல் 150 எம்.பிக்களை ஒன்றிணைத்து நாட்டின் அரசியலை தெலங்கானா மாற்ற வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரசும், பா.ஜ.வும் ஆட்சியில் இருந்துள்ளன. ஆனால் நாடு போதிய அளவு முன்னேறவில்லை.