புதுடெல்லி: டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் 20 கி.மீ. நடை பந்தயத்தில் பங்கேற்க, இந்திய வீரர் கே.டி.இர்பான் தகுதி பெற்றார்.ஜப்பானின் நோமி நகரில் நடைபெற்று வரும் ஆசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கிய இர்பான் (கேரளா, 29 வயது), பந்தய தூரத்தை 1 மணி, 20 நிமிடம், 57 விநாடிகளில் கடந்து 4வது இடம் பிடித்தார். இதன் மூலமாக ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த அவர், டோக்கியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார்.