24 நாடாளுமன்ற மற்றும் 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு சென்னையில் நேற்று டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலில் பண மூட்டைகளை வைத்துக்கொண்டு மட்டுமே ஜெயித்து விட முடியாது. விரைவில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27ம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் துவங்க உள்ளது. கட்சி நிர்வாகிகள் என்னிடம் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்கள். அதன்படி, தொண்டர்கள் விருப்பப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராய் உள்ளேன். இதேபோல், வரும் 22ம் தேதி எங்களின் தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு உள்ளது.