புதுடெல்லி: தேர்தலுக்கு முன் கடைசி 2 நாளில், தேர்தல் அறிக்கை வெளியிட அரசியில் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட, அரசியல் கட்சிகளுக்கு கால விதிமுறை எதுவும் இல்லாமல் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், முதல்கட்ட தேர்தல் நாளில் பா.ஜ தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இது வாக்காளர்களை வசீகரிக்கும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், தேர்தலுக்கு முன் கடைசி 2 நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.