ஆடு மேய்த்த பெண்ணை பலாத்காரம் செய்த இருவருக்கு 7 ஆண்டு சிறை : தூத்துக்குடி மகிளா கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆடு மேய்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெல்லி போலீஸ்காரர் உள்ளிட்ட இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள வீரநாயக்கன் தட்டு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகன் சிவகுமார்(29). இவர் டெல்லியில் பட்டாலியன் போலீசாக வேலை செய்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் பணியில் இருந்த போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 14082014ல் இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சின்னதுரை மகன் சக்திவேல் (29) என்பவருடன் காட்டு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது முத்தையாபுரத்தை சேர்ந்த 50 வயது பெண் காட்டுபகுதியில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட போலீஸ்காரர் சிவகுமார் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் இருவரும் அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளனர். அவர் சம்மதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து போலீஸ்காரர் சிவகுமார், நண்பர் சக்திவேல் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாத் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் சிவகுமார் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறையும் சிவகுமாருக்கு ரூ.4500 மற்றும் சக்திவேலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சுபாஷிணி ஆஜரானார். தண்டனை விதிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர் சிவகுமார்  இந்த வழக்கின் காரணமாக தற்போது வரையில் சஸ்பெண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: