வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே மணமகனை, தாய்மாமன் தூக்கி சென்று மணமகளிடம்ஒப்படைக்கும் நூதன சடங்குடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி. இங்கு ராஜகம்பளத்து நாயக்கர் சமூக மக்கள் உள்ளனர். இவர்கள் இன்றுவரை பழமை மாறாமல் திருமணம் நடத்தி வருகின்றனர். இச்சமூகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் பவித்ரா ஜோடியின் திருமண விழா எழுவனம்பட்டியில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி ஊரின் நடுவே உள்ள மந்தைவெளியில் மூலிகை மரமான பாலமர குச்சிகளையும் இலைகளையும் கொண்டு வந்து மணப்பெண்ணுக்கு குடிசை அமைத்தனர். பின்னர் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வேட்டி, துண்டு அணிந்து குதிரையில் மந்தைக்கு புறப்பட்டார்.