திண்டுக்கல்: திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி(46). பிரபல ரவுடி. இவரது மனைவி பஞ்சு (எ) பஞ்சவர்ணம்(40). மகன்கள் சந்திரசேகர், அசோக்குமார். இவர்கள் கடந்த 2018, ஆகஸ்ட்டில் ஆர்.வி.நகரை சேர்ந்த குமரேசன் என்பவரது கொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். எனவே குமரேசன் ஆதரவாளர்கள் திருப்பூர் பாண்டியின் மகன்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தனர். இதையறிந்த திருப்பூர் பாண்டி, மனைவியுடன் நல்லாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மகன்களை கோவைக்கு அனுப்பி விட்டார். நேற்று காலை 8.30 மணியளவில் நல்லாம்பட்டியில் திருப்பூர் பாண்டி தங்கியிருந்த வீட்டுக்கு ஹெல்மெட் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அதிர்ச்சியடைந்த திருப்பூர் பாண்டி, வீட்டை பூட்டிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டார். ஆனால் அந்த கும்பல் வீட்டின் கதவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசினர்.