கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 1, 6, 9, 11ம் வகுப்பு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு ஒரே ஆண்டில் பாடத்திட்டம் மாற்றியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க இரண்டு ஆண்டு தேவைப்படும் என்ற நிலையில் தமிழகத்தில் 8 மாதத்திலேயே பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 800 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதாக வரும் தகவல் பொய்யானவை. எந்த காலத்திலும் அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமில்ைல.