புதுடெல்லி: ‘விங் கமாண்டர் அபிநந்தன் வேட்டைக்காரனை வேட்டையாடியவர்’ என கவிதை மூலமாக விமானப்படை பாராட்டியுள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 விமானத்தில் பாகிஸ்தானின் விமானத்தை விரட்டி சென்றார். அந்நாட்டுக்கு சொந்தமான எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். பின்னர் பாகிஸ்தானிடம் அவர் சிக்கினாலும் சர்வதேச நிர்ப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டார்.