திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்தர திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நாளை மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுேதவன் நம்பூதிரி நடை திறப்பார். நாளை வேறு பூஜைகள் நடக்காது. நாளை நடை திறந்த பின்னர் தங்க கதவு பொருத்தும் பணிகள் நடக்கும். நாளை மறுநாள் காலை 7.30 மணியளவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கொடியேற்றுகிறார். அன்று முதல் 21ம் தேதிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.