சிவகாசி: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காததால்தான், தேமுதிக டெபாசிட் இழந்தது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது, கூட்டணியை பலப்படுத்தவும், வெற்றி மேல் வெற்றி பெறவும் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால்தான், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால்தான் தேமுதிக டெபாசிட் இழந்தது.