சூரத்: சூரத்தில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில், பாலக்கோட் தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டார். 3 தினங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் அரசால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து அவரது வீரத்தை பாராட்டும் விதமாக, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக சென்றும் வரவேற்றனர்.