நெதர்லாந்து: செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி துறையினர் செவ்வாய் கிரகத்தில் உள்ள செயலிழந்த எரிமலைகளில் செயற்கைகோள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில் அந்த எரிமலைகளுக்கு அடியில் 4,500 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடையங்கள் கிடைத்துள்ளன. ஒரு காலத்தில் பூமியை போலவே நீர் நிரம்பியிருந்த செவ்வாய் கிரகம் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மேற்பரப்பு நீரை முற்றிலுமாக இழந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது செவ்வாயின் அடிப்பரப்பில் நீர் உள்ளது என்றும், நீரில் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.