உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்: விமானப்படை தளபதி

கோவை: இந்திய விமானப்படை சிறப்பான திறன் கொண்டது என்று விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார். கோவை சூலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மிக் 21 ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டு தாக்குதல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உடல் தகுதியை பொறுத்து அபிநந்தன் விமானங்களை இயக்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை நாங்கள் கணக்கு வைக்கவில்லை, அதனை அரசு தான் விளக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் தாக்க வேண்டிய இலக்கை இந்திய போர் விமானங்கள் தாக்கிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: