சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனந்த தாண்டவம் கோலத்தில் உள்ள நடராஜர் சிலை முன் பரதநாட்டிய கலைஞர்கள், நாட்டியாஞ்சலியாக ஆடுவார்கள். மகாசிவராத்திரி விழாவையொட்டி நடராஜர் கோயிலில் இன்று முதல் 8ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, கோயிலில் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் கின்னஸ் சாதனைக்காக 7 ஆயிரத்து 195 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தொடங்கி வைத்தார்.