துபாய்: பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தகுதி பெற்றார்.அரை இறுதியில் பிரான்சின் கேல் மான்பில்சுடன் மோதிய சிட்சிபாஸ் 4-6, 7-6 (7-4), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 மணி, 59 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போர்னா கோரிச்சை (குரோஷியா) மிக எளிதாக வீழ்த்தினார். பைனலில் பெடரர் - சிட்சிபாஸ் மோதுகின்றனர்.