வேளச்சேரி: சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவரது மனைவி சந்தியா (35). துணை நடிகை. இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட பாலகிருஷ்ணன் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டிகளில் வீசினார். இந்த விவகாரத்தில் 2 கால்கள், ஒரு கை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது. இடுப்பில் இருந்து தொடை வரையான பாகம் ஜாபர்கான்பேட்டை மேம்பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை கிடைக்கவில்லை. இவற்றை கண்டுபிடிக்க பெருங்குடி குப்பை கிடங்கில் 14 தினங்களாக போலீசார் மாநகராட்சி ஊழியர்களுடன் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தேடி வந்தனர்.