அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 2வது சந்திப்பில் கலந்து கொள்ள வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கை; பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேசினேன். அப்போது அமெரிக்கா-இந்தியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை பராமரிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.