சோபியான்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தும் பொருட்டு, என்கவுன்டர் நடவடிக்கைகளில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.