நாகர்கோவில்: `பா.ஜனதாவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களை அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில்தான் பார்க்கிறேன்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன்விளக்கமளித்துள்ளார். நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார் என நம்புகிறேன். அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில்தான் பார்க்கிறேன்.