போலி பாஸ்போர்ட்: திருச்சி ஏர்போர்ட்டில் 2 பேர் கைது

திருச்சி:  சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்கள், உடைமைகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த  பாண்டியன் (51) போலி பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாண்டியனை பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அதேபோல் திருச்சியில் இருந்து இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற விருதுநகர் மாவட்டத்ைத சேர்ந்த தயாபரனை (42) இமிகிரேசன் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: