நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2.5 அடி அகலத்தில் கைப்பிடியுடன் கூடிய புதிய பலகை பொருத்தப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக இருந்த வெங்கடேசன், கடந்த மாதம் சுவாமிக்கு மாலை அணிவித்த போது 8 அடி உயரத்தில் உள்ள பலகையில் இருந்து கால் இடறி கருவறையின் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலின் பாதுகாப்பு குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியியல் துறை வல்லுநர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.அர்ச்சகர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யும்போது நீர் லிப்டில் விழும் என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.