தஞ்சை: திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கவுரி(56). புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா(55). புதுக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(65). இவர்கள் மூவரும் தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தங்களது உறவினர் வீட்டின் திருமணத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். திருமணம் முடிந்த பின்னர் ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் நின்றனர்.