உச்ச நீதிமன்றம் உத்தரவு பாஜ அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது

புதுடெல்லி : டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் தேவேந்திர குமார் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பாஜ.வுக்கு எதிராக புகார் மனு கொடுத்தார். அதில், பாஜ.வை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். இந்த மனுவை கடந்தாண்டு ஜூன் 8ம் தேதி தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், `தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறிய பாஜ.வின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டும்.’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், `அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை.’ என்று உத்தரவிட்டனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: