பிரதமர் மோடியின் சொல்படி ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் : சஞ்சய் தத் குற்றச்சாட்டு

புதுச்சேரி : கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 3வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார். புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் ஒவ்வொரு திட்டங்களை வகுக்கும் போதும் ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் சொல்படி கிரண்பேடி செயல்பட்டு வருவதாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு நோட்டீஸ் கொடுப்பது ஆளுநர் வேலை இல்லை என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: