வாலாஜா: வேலூர் மற்றும் ஓசூர் அருகே சினிமா பாணியில் ஓட்டுநர்களை அடித்து உதைத்து 2 லாரிகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். ஓசூரில் காலி அட்டை பெட்டிகளுடன் ஆந்திர மாநிலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு விருதுநகரை சேர்ந்தவர் செல்வகுமார்(52) என்பவர் லாரியை ஒட்டி சென்றார். பள்ளிகொண்டா அருகே சென்ற போது இரண்டு லாரிகள் அருகே வந்து சரக்கு லாரியை மறித்துள்ளது. அப்போது, லாரியில் இருந்து இறங்கிய வடமாநிலங்களை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென லாரியில் ஏறி செல்வகுமாரை சரமாரி அடித்து உதைத்து காவிரிப்பாக்கம் அருகே ஓட்டுநரை கட்டிப்போட்டுவிட்டு லாரியை கடத்தி சென்றுள்ளனர்.