மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் இருந்து நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது. மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் காற்றழுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 4 பயணிகளின் மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. 3 குழந்தைகள் உட்பட 188 பேர் விமானத்தில் பயணம் செய்த நிலையில், பல பயணிகளுக்கு காது வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது.