சென்னை: சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே நாளை காலை 8-2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 மணி ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும்.